உள்நாடு

பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும்

(UTV | கொழும்பு) – பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம் சென்று குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது தேட வேண்டும் என குறிப்பிட்டார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி சர்வதேச தரத்தை உயர்த்தியதன் பின்னர் சர்வதேச சந்தைக்கு திரும்பி டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

எரிபொருள் இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை