உள்நாடு

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது

(UTV | கொழும்பு) – இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் கொண்ட குழு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்தது.

இக்குழுவினர் இன்று (ஜூன் 20) நாட்டை வந்தடைந்தனர்.

இக்குழுவினர் ஒருவாரம் நாட்டில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

“சர்வதேச நாணய நிதியக் கொள்கைகளுக்கு இணங்க இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான டெலிமரின் மூத்த பொருளாதார நிபுணர் பேட்ரிக் கரன், பணியாளர் நிலை ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், சீனா உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடனாளிகள் வழங்க தயாராக இருக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் இறுதி திட்ட அனுமதி நிச்சயமற்றதாக இருக்கும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீடியோ | பொலிஸார் துரத்திச் சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – வவுனியாவில் சம்பவம்

editor

தனது அரசியல் அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்

பல்துறை சார்ந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தும், தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்’ – ரிஷாட்