உள்நாடு

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை – மகேஷ் கம்மன்பில மீண்டும் விளக்கமறியலில்

பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய இயலாமையால் இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய அரசாங்கத்தின் போது, ​​சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உர கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று

NPP யின் 2 உறுப்பினர்கள் மாயம் – வெலிகம சபையில் குழப்பம்

editor

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்