உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

இன்று (06) காலை பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், துப்பாக்கிச் சூடு நடந்தபோது விற்பனை நிலையத்தில் ஒரு பெண் இருந்தபோதிலும், துப்பாக்கித் தாக்குதல் விற்பனை நிலையத்தின் குளிர்சாதனப் பெட்டியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

ராஜித சேனாரத்ன கைது

“திலினியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மஹிந்த” பகீர் தகவல்

ஜனாதிபதி நிதியத்தால் முறைகேடாக வழங்கப்பட்ட நிதி மீளப் பெறவேண்டும் – சாணக்கியன் எம்.பி

editor