உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை!

பாணந்துறை ஹிரான பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார்.

மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த விருந்துபசாரத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று பொலிஸார். தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்ய ஹிரான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

இன்று கொழும்பில் ஆரம்பமாகும் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு

editor

ரஞ்சன் ராமநாயக்க விளக்கமறியலில் [UPDATE]