உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது!

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

editor

மற்றுமொரு பொருளாதார சுனாமியை நாம் எதிர்நோக்கி வருகிறோம் – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

editor

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

editor