உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி திட்டம்

(UTV | கொழும்பு) – சுமார் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19 தடுப்பூசியை வழங்கினோம். இதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் நாம் தற்போது கவனத்திற் கொண்டுள்ளோம். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க வேண்டும் என்பதினாலேயே இவ்வாறு நடவடிக்ககைளை முன்னெடுத்து வருகின்றோம். தடுப்பூசியை வழங்குவதற்கு பணம் இல்லை என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜரோப்பா , அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. அதற்கமைவாக நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்திருந்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

தாக்குதல் நடத்தப்படலாம் – மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட சோதனை

editor

பதற்றநிலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு