உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

 

Related posts

இலங்கை சந்தையில் சினோபெக்கிற்கு முக்கிய பங்கு!

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்