உலகம்

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொவிட் 19) – பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபை  சபாநாயகர் ஆசாத் குவாசிருக்கு (Asad Qaiser ) கொரோனா நோய் உறுதியாகியிருப்பதால், நோய் பரவலை தடுக்க தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் ஆசாத் குவாசிர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா நோய் உறுதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆசாத் குவாசிர் தம்மை தாமே வீட்டில் சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.

இதேபோல் ஆசாத் குவாசிரின் மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர்களும் தங்களை தாங்களே தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர்.

Related posts

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் எமன்

Shafnee Ahamed

கொஞ்சம் ஸ்லோ ஆக இருக்கும் தடுப்பூசிகள் வேலை செய்யாது

பிரேசிலில் கனமழை – 57 பேர் உயிரிழப்பு