துபாயை தளமாகக் கொண்டு நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை நடத்தும் ‘பஸ் லலியா’ எனப்படும் லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சப்-இன்ஸ்பெக்டர் நுவன் திலகரத்ன உள்ளிட்ட குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வீதித் தடை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதனைத் தவிர்த்து தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 7 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.