உள்நாடு

பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் இன்று(14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முதியோருக்கான கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானம்

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் – சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

editor

சில பகுதிகளில் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி