உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து பேரணி

(UTV | கொழும்பு) – பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பிலும் நாளை (15) முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் முறையிடும் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பினால் நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்காக நாளை (15) செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கைகோர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’

வடகிழக்கு பகுதிகளை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் – சஜித்

editor