உள்நாடு

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

(UTV | கொழும்பு) –  தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும், உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தமது சானிடைசர் உற்பத்திகளை பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்க்பட்டுள்ளது

 

Related posts

அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து- மே தின செய்தி வெளியிட்ட ரணில்

கம்மன்பில CID இற்கு

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்