உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

எகிறும் கொரோனாவுக்கு பலியாகும் உயிர்கள்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்