உலகம்

பங்களாதேஷ் போராட்டம் – ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர்

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் என்ற பிரச்சினையை முன்வைத்து நடத்திய போராட்டம் இறுதியில் வன்முறையாக மாறி 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தற்போது முடிவுக்கு வந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா.வும் பிற சா்வதேச அமைப்புகளும் பங்கேற்க வேண்டும்.

அத்துடன் மாணவர்களின் போராட்ட வன்முறை குறித்து விசாரணை சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடைபெற வேண்டும் என்றும் அந்த நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

பங்களாதேஷுக்கு IMF ஆதரவு

மியன்மார் மண்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு