சூடான செய்திகள் 1

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) நாட்டிற்கு வருகை தந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தனது விஜயத்தின்போது நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தவுள்ளதாக, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன்அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

மட்டகளப்பு பல்கலைக்கழகம் பற்றிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவை குழுவுக்கு

கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு