உலகம்

நோபாளத்தில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோபாளத்தில் முதலாவது மரணம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக நேபாளத்தின் சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த 6 ஆம் திகதி, குழந்தை ஒன்றை பிரசவித்து காத்மண்டு வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண், மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேபாளத்தில் இதுவரை 281 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் – 19 : சிகிச்சை முறை எதற்கும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி

editor

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்