உள்நாடு

நேற்றைய தினம் 39 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,234 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம்(13) மாத்திரம் 39 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 12 பேருக்கும், கட்டாரில் இருந்து வந்த 16 பேருக்கும், உக்ரைன் பிரஜை ஒருவருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், குவைட்டில் இருந்து வந்த 6 பேருக்கும், செங்கடல் பிராந்திய கடலோடி ஒருவருக்கும் நேற்றைய தினம் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,996 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 226 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

editor

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் களமிறங்குகிறார் காசிலிங்கம்

editor