சூடான செய்திகள் 1

நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று(15) கூடுகிறது

(UTV|COLOMBO)-குழப்ப நிலைமைக்கு மத்தியில் நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று காலை  10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஜே.வி.பியினால் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்திற்கு தோல்வி ஏற்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஏற்பட்ட குழப்ப நிலைமையினால் இன்றைய தினம் முற்பகல் 10 மணிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு