உள்நாடு

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் தொடர்பில் எச்சரிக்கை

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஔிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor

குருந்தூர்மலை, வெடுக்குநாறி  ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் – விதுர விக்கிரமநாயக்க

மிகவும் கடினமான சூழலில் தமிழர்கள் உள்ளீர்கள்- தமிழ் எம்பிக்களிடம் அமெரிக்க தூதுவர்