அரசியல்உள்நாடு

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று (11) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதன் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான ஜீவன் தொண்டமான் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Related posts

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான புதிய சட்டமூலங்கள் விரைவில் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை