உள்நாடு

நிதியமைச்சின் நிராகரிப்பு வெற்றியளிக்குமா

(UTV | கொழும்பு) – எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவேண்டு​மென எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை இன்மையால் கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!

30வயது இளம் தாய் சவூதியில் சித்திரவை : உடம்பு முழுவது குண்டூசிகள் மீட்பு

“மா விலை குறைவினால் பாண் – பன்களின் விலையில் மாற்றமில்லை”