சூடான செய்திகள் 1

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ – கலல்பிடிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் இருந்து கதுறுவலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிடிவல மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

செயற்கை நுண்ணறிவு – இலங்கை புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும்

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு