அரசியல்உள்நாடு

நாவிதன்வெளியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச மத்திய குழுக்கூட்டம்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுக்கூட்டம், நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் அல்ஹாஜ் நிசார் ஹாஜியார் அவர்களின் தலைமையில், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ் அவர்களின் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதான அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் கலந்து கொண்டார். இதனுடன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும், நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த கட்சிக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் (MP) அவர்களின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான வருகை தொடர்பாகவும், நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளுக்கான இளைஞர் அமைப்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் பிரதேச ரீதியான கட்டமைப்பு வலுப்படுத்தல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-அம்பாறை நிருபர் நூருல் ஹுதா உமர்

Related posts

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் – மனிதாபிமான ரீதியாக கூறுகிறேன் – ரணில் விக்ரமசிங்க

editor

மூதூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளை இணைத்துக் கொண்டமைக்காக கௌரவிப்பு

editor