சூடான செய்திகள் 1

நாளை 24 மணிநேர நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-அவசர திருத்தப் பணிகள் காரணமாக மஹரகம மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளுக்கு நாளை(26) நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை(26) காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(26) காலை 8 மணிவரை 24 மணிநேர நீர் விநியோகத் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம,பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் விநியோகிக்கப்படமாட்டது

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ