உள்நாடு

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை நாளை(26) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரூந்து போக்குவரத்து சேவைகள் நாளை அதிகாலை 4.30 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

ரிஷாட் எம்.பியின் தலையீட்டில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அதிரடியாக இடைநிறுத்தம்!

editor