சூடான செய்திகள் 1

நாளாந்தம் 500-600 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-நாளாந்தம் 500 முதல் 600 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,743 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், யாழ். மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலையைத் தொடர்ந்தே, டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பேருவளை துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் கைது

பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பம்

க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள் பரீசிலனை பெறுபேறுகள் வெளியாகின