உள்நாடு

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் கோரியே தாம் கடிதம் அனுப்பியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து புத்திக மனதுங்க விலகியுள்ளதாகவும், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படுமா ?

editor

மஹபொல கொடுப்பனவு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

editor

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது