உள்நாடு

நாட்டை முடக்கத் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின்படி, நாட்டை முழுமையாக முடக்காமல், கொவிட் பரவலை கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பூசிகளைப் பெறுக்கொள்வது சிறப்பானதாக அமையும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம், மேலும் நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடிந்தால், அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Related posts

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு

8,435 பேருக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சவூதி பேரீச்சம்பழங்கள் இம்முறையே நியாயமாகப் பகிரப்பட்டது – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

editor