கிழக்கு மாகாணத்தின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அணிவகுப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் திணைகள அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
78 வது சுதந்திர தின நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு உரை நிகழ்த்தினார்.
இம்முறை அரசாங்கத்தின் தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொனிப்பொருளாக அமைவது மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்பதை அடிப்படையாக கொண்டது.
இதற்கு மூல காரணமே இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல்காற்றின் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாய் திருநாட்டை மீள்கட்டியெழுப்புவதை அடையாளமாக கொண்டதாகும்.
ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்றுப் பரவல் மற்றும் அதற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டும் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்ற தருணத்திலே இவ் டித்வா பேரனர்த்தம் ஏற்பட்டது.
இருப்பினும் எந்தவொரு சவால்களுக்கும் முகம் கொடுத்தது மீள கட்டியெழுப்புகின்ற பலம் மற்றும் தைரியம் இலங்கையராகிய எமக்கு உள்ளது.என்பதை நினைத்து பெருமிதம் அடைகின்றோம்.
இது எமக்கு புதிய விடயமல்ல. வரலாறு முழுவதும் இவ்வாறான தடைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டுள்ளோம்.
ஆகவே இம் முறையும் நம் நாடு என்ற அடிப்படையில் மீள கட்டியெழுப்புவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், டித்வா பேரிடருக்கு பின்னர் உடனடியாக எமக்கு உதவி வழங்கிய எமது அண்டைய நாடான இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரகம் உள்ளிட்ட ஏனைய நட்பு நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
.’நாட்டை கட்டியெழுப்புவோம்’ நிதியத்திற்கு ஏறத்தாள ரூபா 8.5 மில்லியனுக்கு மேலதிகமான உதவித் தொகையை வழங்கியவர்களுக்கும் நன்றிகள்.
2026ம் ஆண்டுக்குரிய பாதீட்டில் ரூபா 1400 மில்லியன் மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அதற்கு மேலதிகமாக டித்வா பேரனர்த்தத்தால் பாதி பட்டவர்களுக்கு ரூபா 500 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாண சபைக்கான மூலதன மற்றும் நடைமுறை செலவுக்காக ரூபா 11580 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2024ம் ஆண்டு அரசினால் ஒதுக்கப்பட்ட நிதியைக்காட்டிலும் இரு மடங்கானது.
இதற்கு மேலதிகமாக இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 33 கருத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ரூபா 2370 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமே உரித்தான அபிவிருத்தி திட்டங்களுக்காக அடுத்து வரும் 03
வருடங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
(அண்ணளவாக ரூபா 31.000 மில்லியன்) இந்த அனைத்து முதலீடுகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் உள்ள 03 மாவட்டங்களுக்கும் நேரடி பிரகியம் கிடைப்பதுடன், மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை தரமும் உயரும்.
2026 ஆம் ஆண்டின் எமது நாட்டின் 5 சதவீதம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் அவ் இலக்கை பொருளாதார வளர்ச்சி இலக்காக அடைய முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும்.
இதற்கு பங்களிப்பு செய்வதற்கு தனியார் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் நான் திறந்த அழைப்பு விடுக்கின்றேன்.
மேலும், தற்போதைய அரசாங்கம் இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற வெளிப்படையானதும் பொறுப்பு கூறுவதுமான அரச சேவையை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
குடும்ப உறவு. தனிப்பட்ட சுய இலாபங்களுக்கு எமது இந்த ஆட்சியில் ஒரு போதும் இடம் கிடையாது. இதற்காக முக்கிய நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், ஆளுநர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு அலுவலகமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பேரணிகள் உட்பட கலாசார நிகழ்வுகளில் வெளிப்படுத்திய வீரமானது 78 வருடங்களுக்கு முன்னர் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி அமைக்கும் என்பதற்கு எதிர்காலத்தில் மிக சாட்சியாகும் என்பதுடன் பல்வேறு கலாசாரங்களுக்கிடையில் கட்டியெழுப்புகின்ற படைப்பாற்றலுடன் கூடிய ஒற்றுமையானது.
எமது நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்பதற்கு சாட்சியாகும். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் என்பன வெறுமனே ஒரு கனவல்ல. அதனை உண்மையான யதார்த்தமாக மாற்றியமைக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அர்ப்பணிப்போம். இந்த செயற்பாட்டை கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிப்போம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
-கிண்ணியா நிருபர் ஏ. ஆர். எம். றிபாஸ்
