சூடான செய்திகள் 1

“நாட்டுக்காக ஒன்றுபடுவோம்” அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி

(UTV|COLOMBO) நாட்டுக்காக ஒன்றுபடுவோம் என்ற அபிவிருத்தி வேலைத்திட்ட தொடரின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி 18ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் புத்தளம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 23ம் திகதி வரை நடைபெறும். பல்வேறு அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் வழங்கும் மக்கள் சேவைகளை ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் மாவட்ட மட்டத்தில் ஆரம்பித்து முறைப்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய நாட்டுக்காக ஒன்றுபடுவோம் வேலைத்திட்டம் அமுலாகிறது.

Related posts

ரஞ்சன் மீதான வழக்கு ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

தென்கொரியா எரிபொருள் களஞ்சியசாலை வெடிப்பு சம்பவம்-இலங்கையர் கைது