உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர் தற்கொலை

(UTV | கொழும்பு) –   கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமையப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வீட்டுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு மாணவர்கள் இணைப்பு!

editor

துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி பலி

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்