உள்நாடு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு நாட்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப்பெற்ற மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது

editor

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச

editor

வௌிநாடுகளுக்கு செல்வதை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை