உள்நாடு

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) -நாவலபிடிய நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக இவர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேன-நாவலபிடிய வீதியில் உள்ள ஒரு விடுதியொன்றிற்குள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (30) கைது செய்யப்பட்டிருந்தனர்

இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்

மேலும் 415 பேர் குணமடைந்தனர்

இஸ்ரேலியரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் – நிஹால் தல்துவ

editor