உள்நாடு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கோளாறை சரிசெய்து, பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகத்தை மீட்டமைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பு, இலங்கையின் மின் விநியோக அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொழும்பு, களுத்துறை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது.

இந்த இடையூறு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின் விநியோகத்தை மீட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் மீட்டமைக்கப்பட்டுள்ள போதும் சில பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்படுவதற்கு மேலதிக நேரம் தேவைப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்