உள்நாடுகாலநிலை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (17) மாலை 4:00 மணி முதல் நாளை (18) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல

காலி மாவட்டம்: நெலுவ

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல

கண்டி மாவட்டம்: தொலுவ, உடுநுவர, தெல்தோட்டை

கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, ரம்புக்கனை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, ருவான்வெல்ல

குருநாகல் மாவட்டம்: அலவ்வ, ரிதீயகம

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, பல்லேபொல, ரத்தொட, உக்குவெல, யடவத்த மொனராகலை மாவட்டம்: மெதகம

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரங்கேத்த, அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, கலவான, எஹலியகொடை

Related posts

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

ரயில் சேவைகள் வழமைக்கு

சட்டவிரோத சொத்து குவிப்பு – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor