உள்நாடு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறு அந்த சபை அறிக்கையொன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் நீர்ப் பாவனை அதிகரித்துள்ளது. நீர் வழங்கல் நிலையங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் 24 மணிநேரமும் பொதுமக்களுக்கு ஒரே அழுத்தத்திலான நீர் விநியோகத்தினை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உயர் நில பகுதிகளின் பாவனையாளர்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகமே இடம்பெறக்கூடும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை

வடக்கு புகையிரதத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 5 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்

இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கி படுகொலை செய்த 20 வயதுடைய மகன் கைது

editor