உள்நாடுபிராந்தியம்

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

குருணாகல் – வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

குருணாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனெ காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

இந்த இளைஞன் உஹுமீய பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் சென்று தேங்காய் திருட முயன்றுள்ளார்.

இதன்போது தென்னந்தோப்பின் உரிமையாளர் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான தென்னந்தோப்பின் உரிமையாளர் 12 ரக போர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரம்புகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

editor