உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு – போக்குவரத்துக்கு பாதிப்பு.

(UTV | கொழும்பு) –

தெற்கு அதிவேக வீதியில் நேற் ஏற்பட்ட மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடை தொடர்வதாகவும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிகளுக்கு உட்பட்ட 102 ஆம் மைல் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த வீதியூடான போக்குவரத்து தடை தொடர்ந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor