சூடான செய்திகள் 1

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சிலாபம், தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 70 அடி 6 அங்குலம் உயரத்தில் நீரின் கனஅளவு காணப்படுவதால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தெதுருஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

மத்துகம – கொழும்பு தனியார் பேருந்துகள் சேவைப் புறக்கணிப்பில்

வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!