சூடான செய்திகள் 1

தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) மிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் அமைந்துள்ள புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரதும் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூதூர் பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 18 வயதுடைய குறித்த மாணவர்கள் இருவரும் திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்

தே.அடையாள அட்டை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கம்

வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்’ தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையும் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மன்னாரில் அறிவிப்பு!