விளையாட்டு

துஷ்மந்த சமீரவுக்கு நாளை சத்திரசிகிச்சை

(UTV |  மெல்போர்ன்) – இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சமீரா தொடரில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

அதன்படி அவருக்கு நாளை (29) காலை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

“நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை” நாடு திரும்பிய இலங்கை அணி

“நான் எப்போதுமே எனக்கு கெப்டனாகவே இருக்கிறேன்”

ஹர்பஜன்சிங் இடத்தினை பிடிக்க 4 வீரர்கள்