உள்நாடு

துருக்கி விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் விபத்து

(UTV | கொழும்பு) – துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் நேற்று (04) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

330 எயார்பஸ் சரக்கு விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தின் மீது ஏற்றிக் கொண்டிருந்த கொள்கலன் ஒன்று விமானத்தின் இயந்திர இலக்கம் 2 இல் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு விமான நிலையத்தை சுற்றி பலத்த காற்று வீசியது.

எனினும் விமான நிலைய நடத்துநர்கள் முறையாக பிரேக் போடாததால் இந்த விபத்துகள் நடந்ததா என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் இன்னும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

வன்னியில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

editor

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு