உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மஸ்கெலியா, சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த சந்தேக நபர் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தினை சோதித்து பார்த்ததிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரிய வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாவனெல்லை, ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

editor

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவுமில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்