சூடான செய்திகள் 1வணிகம்

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

(UTV|COLOMBO) – தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பணமாக தலா 15,000 ரூபாய் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேயிலை சபையூடாக குறித்த இந்த முற்பணம் வழங்கப்படுமென, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மேலும் கம்பனிகள் மூலமாகவும் தொழிலாளர்களுக்குப் 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 22 வது நபர் அடையாளம்

490 வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச இசை விருது விழா