உள்நாடு

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்தது பல பொருட்களைத் திருடிய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார. தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அயகம பொலிஸில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டராவார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து 136,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியதற்காகவும் பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்து ரூ.1,250,000 மதிப்புள்ள சொத்துக்களைத் திருடியதற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சபாநாயகரை சந்தித்தார்

editor

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் இரத்துச் செய்யப்படும் – முசலியில் பிரதமர் ஹரிணி

editor

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

editor