அரசியல்உள்நாடு

தயாசிறி ஜயசேகரவின் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (23) பாராளுமன்றத்தி்ல் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் தலைவராக பிரதிக் குழுக்களின் தலைவர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

Related posts

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

மருதானையில் ரயில் தடம் புரள்வு

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!