உள்நாடு

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

(UTVNEWS | INDIA) –தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.

மேலும், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும்  கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 11 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

நீதிமன்றம் சென்ற ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க

கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த டிலித்!