உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பின்பற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 9,029 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ‘சமீர சம்பத்’ கொலை

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்

அரிசி இறக்குமதி வரியை குறைக்குமாறு வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor