உள்நாடு

தனிமைப்படுத்தல் மற்றும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் : ஊர்காவற்துறை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்படி பிரதேசம்

மாத்தறை மாவட்டம் : மாத்தறை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுககள்

களுத்துறை மாவட்டம் : தொடங்கொட பொலிஸ் அதிகாரப்பிரிவின் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை அதிகாப்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

விசேட சோதனை நடவடிக்கையில் 1,120 பேர் கைது